Sunday, November 1, 2020

Coded Songs

There are some songs that you can correlate with programming. Something in them, may be the music or lyrics or visuals subtly touches programming parts of our brains, just like the hot sun that makes us feel like a kid on the playground or the smell of rain that brings back some memories. Here's my list and comment yours.

1. It's a kind of magic by Queen

It makes me feel like a program getting executed. Freddie Mercury is the executing thread that brings everything like local variables, instances and references to life and once he leaves everything goes down to their previous states.

2. I gotta hate her by Bruno Mars

The music oddly reminds of recursive functions while we debug them.

3. Paranoid Android by Radiohead

The song's music and visuals can be correlated with some nested recurring patterns where we concentrate on the inner recursions and finally the grand recursion dawns in the back of our mind!

4. Hysteria by Def Leppard

The song's lyrics reminds me of the early days of learning programming. Lonely nights and the mystery of the code and the hysteria it gives... Also the song's era and style takes you closer to the days of pre-internet computers.

5. Kashmir by Led Zeppelin

This song's music and theme reflects the feeling we get when we encounter a large scale application/system built in a language or technology we are not familiar with, yet we can understand their characters by intuition and see the patterns in them that are so familiar.

Thursday, October 5, 2017

Problem With TrueCaller and Similar Apps

There are lot of so called caller identification apps that will put a name for an unknown number calling your cellphone. But the ugly truth behind this is usually overlooked. People just don't understand that just by installing these stealthy apps, they are breaching privacy of others and also putting themselves and others in risk. Let me explain few of the possible scenarios and a possible solution for handling apps like this.

1. Person A gives his number to Person B so that they can stay in touch (may be for business or personal needs). Person C asks Person B for Person A's mobile number.

In usual case, Person B will politely refuse to share Person A's number. In some cases Person B will call Person A to get his consent to give his number to Person C.

But in TrueCaller's case, the entire contact list of Person B is uploaded to TrueCaller's server WITHOUT getting the consent of anyone in the list.

2. Person A stores some sensitive information like credit card numbers and PIN numbers as contacts. (It is stupid, but people always do that right?)

In usual case, Person A puts his credit card at risk in case someone snatches his phone or hacks in to his phone.

But with TrueCaller, the numbers are uploaded to the third-party server by default. They may claim that their system will filter out numbers that are not phone numbers. But who is going to audit it?

3. Person A stores his brother's/girlfriend's/son's/mom's number with their pet-name.

In usual case, this can be seen only by few (if they are staring in to Person A's phone when their dear one is calling.

With TrueCaller, the contact is uploaded and anyone who receives a call from the number may get the pet/nick name of the person. Similarly, some people store relationships like "Person A's Mom", "Person B's Wife" etc in their phone. With whose consent these sensitive information are shared with anyone on the Internet?

4. A womanizer or a scammer can browse the TrueCaller database with random numbers and get the names. Sometimes information like the company they work for or the college they study are also included with the contact name. With this, they can call the person and start a conversation like "Hey, Rajesh, how are you? I studied MSc with you..."

Above mentioned are not the only problems you can have. There are lot more possibilities that we can never figure out! The main problem with TrueCaller and such apps are this. My (or your) mobile number, name and often, other sensitive information are uploaded to the server of a private third-party's server without my (or your) consent just because some asshole who stored your number in his contact list installed a stupid app to say him who is calling from an unknown number.

To avoid the above mentioned problems and to ensure that everyone's privacy is respected, these apps should first get the consent of the users before they store their data in their servers and make them accessible to the public. If someone who has your contact uploads their entire contact list to these thrid-parties, they should send an SMS or make an automated voice call to get your consent before even storing your data in their servers. Unless this is done, these apps remain as a serious privacy and security threat to the public.

If you want to protect yourselves and your family and friends from these rouge apps, follow the below steps.

1. Uninstall these rouge apps if you have them installed
2. If these rouge apps come pre-installed with your phone, then disable them before you start using the phone.
3. Go to their sites and unlist your numbers.
4. Tell about the dangers to your friends and family and ask them to do the above steps.
5. Give feedback to developers of these unethical apps. Give them poor rating. File complaints against them in appropriate forums.

Thursday, September 7, 2017

"நீட்" (NEET) குறித்த ஓர் நீண்ட பதிவு

2007ல் பொறியியல் நுழைவுத் தேர்வு முறை நீக்கப்பட்ட போது ஏற்கனவே பொறியியல் படித்து முடித்திருந்த நான் அதை எதிர்த்தேன். அப்போது என் மனதில் இருந்த எண்ணங்கள் வேறு. நான் இக்கட்டான குடும்ப சூழலில் இருந்து 12ஆம் வகுப்பு படித்தவன். என் கையெழுத்து சரியிருக்காது. மனப்பாடத் திறன் குறைவாகப் பெற்றவன். ஆகவே இயல்பாகவே எனக்குப் பொதுத் தேர்வில் மதிப்பெண் கிடைப்பது கடினம். குறிப்பாக எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. உயிரியல்த் தேர்வை நான் சிறப்பாக எழுதியிருந்தேன். 198 மதிப்பெண்களுக்குச் சரியான பதில்களை எழுதியிருந்தேன். ஆனால் வந்த மதிப்பெண்களோ 168. 

எப்படியும் மருத்துவம் படிக்கப் போவதில்லை என்று முடிவானதால் நான் மறுதிருத்தம் கோரவில்லை. ஆனால் சில ஆசிரியர்களின் கூற்றுப் படி என் தேர்வெழுதும் விதமே சரியில்லையாம். நான் எதையும் மனப்பாடம் செய்து எழுதியதில்லை. சொந்த நடையில் மட்டுமே எழுதுவேன். ஆனால் அவர்கள் கூற்றுப்படி புத்தகத்தில் இருப்பதை அப்படியே எழுதுபவனும் நானும் சமமல்ல. அவன் கண்டிப்பாக என்னைவிட அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்று கூறினார்கள். அது எனக்கு நெருடலாக இருந்தது. 

ஆனால் நுழைவுத்தேர்வு முடிவுகள் வந்தபோது என்னோடு பயிற்சி வகுப்புகளுக்கு (கோச்சிங் கிளாஸ்) வந்து என்னைவிட அதிகப் பொதுத் தேர்வு மதிப்பெண்கள் பெற்றவர்களைவிட நான் அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தேன். இதில் அவர்களுக்கும் எனக்கும் ஒரே பள்ளி, ஒரே யிற்சி வகுப்பு. ஆனால் அவர்கள் பொதுத்தேர்வில் என்னைவிட மிக அதிக மதிப்பெண்கள். நான் அவர்களைவிட நுழைவுத்தேர்வில் பல மதிப்பெண்கள் அதிகம். ஏன் இந்த முரண்பாடு? ஒருவேளை நுழைவுத்தேர்வு இல்லாதிருந்திருந்தால் நான் படித்த கல்லூரியும் பிரிவும் எனக்குக் கிடைத்திருக்காது. நிற்க... 

ஆகையால் 2007ல் நுழைவுத் தேர்வை ஆதரித்து போல் இப்போதும் நீட்டை ஆதரிப்பேனா? இல்லவே இல்லை. எனக்கு யிற்சி வகுப்பு எடுத்த ஆசிரியர் விருப்ப ஓய்வு (VRS) வாங்கிவிட்டு சொந்தமாகப் பள்ளி கட்டியதும் அந்த கோச்சிங் நிறுவனம் சொந்தமாகப் பொறியியல் கல்லூரியே கட்டியதும் நினைவிருக்கிறது. அது அப்போது பெரிதாகத் தெரியவில்லை. ஆனால் இப்பொழுது அது எவ்வளவு பெரிய சுரண்டல் என்றும் பணக்காரர்கள் மட்டுமே மேலேற உதவும் கட்டமைப்பு என்றும் புரிகிறது. என்னதான் செய்வது?

சமச்சீர் கல்வி தரம் தாழ்ந்தது போலவும், அதற்க்கு முன் இருந்த மெட்ரிக் கல்வி முறையும் தற்போது பரவிவரும் சி.பி.எஸ்.சி. கல்வி முறையும் எதோ சர்வதேசத் தரத்தில் இருப்பதுபோலவும் பலரும் நம்புகின்றனர். இது முற்றிலும் தவறான கருத்து. சமச்சீர் கல்வி புத்தகங்கள் வெளியிடப்பட்டபோது என் தந்தை அப்புத்தகங்களில் இருந்த குறைகளை ஆராயும் குழுவில் இருந்தார். அதற்க்கு முன் இருந்த மாநிலக் கல்வித்திட்டத்தோடு ஒப்பிட்டால் சமச்சீர் கல்வி பன்மடங்கு மேம்படுத்தப் பட்டுள்ளதாக 33 வருட ஆசிரியப் பணி அனுபவம் உள்ள அவர் சொன்னார்.

பிறகு நானும் இணையதளத்தில் வெளியிடப்பட்டிருந்த பாடநூல் கோப்புகளைப் பதிவிறக்கம் செய்து வாசித்தேன். உண்மையில் நான் பயின்ற பாடத்திட்டத்தைவிட மிகச் சிறந்த முறையில் படங்கள் வடிவமைக்கப் பட்டிருந்தன. அப்படியே அந்தத் திட்டம் சரியில்லை என்று கருதுபவர்கள் சற்றேனும் அறிவு நாணயம் உள்ளவர்களாக இருந்தால், பாடத்திட்டத்தை மேம்படுத்த வேண்டும் என்று குரல் எழுப்பியிருக்கலாம். ஆனால் அவர்கள் இந்த சமச்சீர் கல்வி முறையையே வேண்டாம் என்கிறார்கள். 

இங்குதான் "உள்குத்து" உள்ளது. அதுவரை பணக்காரனுக்கு ஒரு கல்வித்திட்டம் (மெட்ரிக்) ஏழைக்கு ஒரு கல்வித்திட்டம் (மாநிலக் கல்வித்திட்டம்) என்று இருந்த முறை நீக்கப்பட்டு அனைவருக்கும் சமமான கல்வி என்ற சமூக நீதி இவர்கள் கண்ணை உறுத்துகிறது. இதுநாள்வரை நவீன வர்ணாஸ்ரமமாக நிலவிவந்த கல்விப் பாகுபாடு இல்லாமல்போனது இவர்களுக்கு எரிச்சல் ஊட்டுகிறது. இதை மீண்டும் கொண்டுவரத் துடிக்கிறார்கள்.

மேலும் கல்வித் தந்தைகளும், கல்வி வள்ளல்களும், கட்டிவைத்திருக்கும் பள்ளிகளில் "சிறப்புக் கட்டணம்" வசூலிக்க அவர்கள் சொல்லும் முக்கிய காரணம் (selling point) "எங்கள் கல்வித்திட்டம் மேலானது". இன்று சமச்சீர் கல்வியில் அந்த வாதம் தவிடுபொடியாகிவிட்டது. ஆகையால் அவர்களுக்கும் "வியாபாரம்" படுத்துவிடுமோ என்ற கவலை. இப்படி அவனவனுக்கு அவனவன் கவலை.

ஆகவே இன்று NEET போன்ற சிக்கல்களைக் கையில் எடுத்துக்கொண்டு சமச்சீர் கல்வியின் மீது உள்ள வெறுப்பை வெளிப்படுத்தும் அற்பவாதிகளிடம் நாம் கவனமாக இருக்க வேண்டும். பாடப்புத்தகத்தை மனனம் செய்து அப்படியே கக்குவது தவறான ஒரு கல்வி முறையினால் வருவது அல்ல. அது தவறான தேர்வு மற்றும் திருத்த (evaluation) முறையினால் வருவது. இதேபோன்ற சூழலை எல்லாக் கல்வி முறையிலும் கொண்டுவர முடியும். ஆகவே சமச்சீர்க் கல்வித் திட்டத்தை மாற்றவேண்டியது இல்லை! அதில் உள்ள தேர்வு முறையையும் விடைத்தாள் திருத்தும் முறையையும் மாற்றினால் போதும்.

குறிப்பாக புத்தகத்தில் உள்ள கணக்குகள் எண்கள்கூட மாறாமல் வினாத்தாள்களில் வருவது, அப்படியே புத்தகத்தில் உள்ளதை எழுத்துக்கு எழுத்து எழுதுவது போன்ற வகையில் தேர்வுகள் இல்லாமல் படித்ததை புரிந்துகொண்டு விடையளிக்கும் வகையில் நம் தேர்வு முறை மாற்றப்பட வேண்டும். இது ஒன்று மட்டுமே போதும். நல்ல புரிதலும், சிந்திக்கும் திறனும் உள்ள மாணவர்களே நல்ல மதிப்பெண்கள் பெறும்படி தேர்வுமுறை இருக்கும்போது தனித்தனி நுழைவுத்தேர்வுகள் நடத்தவும் தேவை இருக்காது.

மருத்துவ நுழைவுத் தேர்வு என்று தனியாக ஒன்று இருப்பது எதற்கு? ஏற்கனவே பன்னிரெண்டாம் வகுப்பில் உயிரால் பாடம் எடுத்து, அதில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள்தானே மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பிக்க முடியும்? அப்படி இருக்க அதற்க்கு எதற்கு ஒரு தனி நுழைவுத்தேர்வு? இத்தகைய தேர்வுகள் இதை வைத்து பயிற்சிவகுப்பு நடத்தி காசுபார்க்கும் கயவர்களுக்கும், ஆறாம் வகுப்பிலிருந்தே தன்பிள்ளையை பல லட்சம் கட்டிப் பயிற்சிவகுப்புகளுக்கு அனுப்பும் ஆண்டைகளுக்குமே உதவும். இதனால் எப்படி மருத்துவக் கல்வியின் தரம் உயரும்?

அப்படியென்றால், 10ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு, 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு, மருத்துவக் கல்லூரியில் உள்ள தேர்வுகள் எல்லாம் வடிகட்டாத ஒரு தகுதியற்ற மாணவனை இந்தத் தகுதித்தேர்வு மட்டும் மந்திர வித்தை மூலம் கண்டுபிடித்துவிடுமா? அப்படி என்ன அந்தத் தேர்வு செய்கிறது? இதுவரை விண்டோஸ் 8 பயன்படுத்திவந்தவரிடம் விண்டோஸ் எக்ஸ்.பி உள்ள கணினியைக் கொடுத்துப்பாருங்கள். அவர் திணறிப் போவார். அதானால் விண்டோஸ் 8 இயங்குதளம் எக்ஸ்.பி இயங்குதளத்தைவிடத் தரம் தாழ்ந்ததாகிவிடுமா? அதுபோலவே உள்ளது இவர்கள் வாதமும். ஒருவன் 12 வருடங்கள் படித்த பாடத்திட்டத்தில் இருந்து கேள்வி கேட்காமல் வேறு பாடத்திட்டத்தில் இருந்து கேள்வி கேட்டால் அது எப்படி நியாயம்?

இப்படி NEETக்கு வக்காலத்து வாங்கும் அறிவுஜீவிகளிடம் இதை மட்டும் கேளுங்கள். "வெளிநாடுகளில் மேற்படிப்புப் படிக்க அந்த நாட்டு மொழிகளில் தகுதித்தேர்வு எழுதுவது போல, தமிழகக் கல்லூரிகளில் படிக்க வரும் அனைவரும் தமிழிலும் தகுதித்தேர்வு எழுதித் தேறி இருக்கவேண்டும் என்று சொன்னால் ஏற்பீர்களா?" என்று. இந்த நவீன-தீண்டாமைவாதிகள் ஒன்று தலைதெறிக்க ஓடிவிடுவார்கள் அல்லது நம்மை தேசத் துரோகி என்று உச்ச சுதியில் கத்துவார்கள். ஆகையால் தரம் உயர்த்துவது, சம உரிமை போன்ற NEET  ஆதரவு வாதங்கள் எல்லாம் சற்று உற்று நோக்கினால் தரைமட்டமாக விழுந்துவிடுகின்றன.

எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு முக்கியமான கருத்தையும் முன்வைக்கிறேன். மருத்துவம் மட்டும் அல்ல. எந்தப் படிப்பும் படிப்பதற்கு தேர்ச்சி ஒரு தகுதியாக இருக்கலாமே ஒழிய, மதிப்பெண்கள் ஒரு தகுதியாக இருக்கக்கூடாது. ஒவ்வொருவன் குடும்பத்திலும் ஒவ்வொரு துன்பம் இருக்கும். வெகுசிலரே கவலைகள் இல்லாமல் பள்ளி/கல்லூரிகளுக்கு வருகின்றனர். அப்படி இருக்க ஒரே ஒரு தேர்வில் அவர்கள் எடுக்கும் மதிப்பெண்கள் மட்டும் அவர்களின் தகுதியாகிவிடுமா? அம்மா அப்பா திட்டுவார்கள் என்று நல்ல மதிப்பெண் எடுப்பவர்களே இங்கு அதிகம். இந்தப் படிப்பை நீ படித்தால்தான் எனக்கு கெளரவம் என்று பெற்றோர் தரும் உளவியல் அழுத்தத்தால் மதிப்பெண்களைக் குறிவைத்துப் படிப்பவர்களும் ஏராளம். பந்தயக்குதிரை போல வெறும் முதலிடத்தை இலக்காக வைத்துப் படிப்பவர்களும் உண்டு. இவர்களில் யாருமே ஒரு நல்ல மருத்துவராகவோ, நல்ல பொறியாளராகவோ, நல்ல ஆசிரியராகவோ ஏன் நல்ல மனிதனாகவோகூடத் தகுதியற்றவர்கள்.

ஓட்டுக்குப் பணம் கொடுத்து வெற்றிபெற்றவுடன் செலவு செய்த காசை மீட்டெடுக்க ஊழல் செய்யும் அரசியல்வாதிபோல, சிறப்புவகுப்புகளுக்கும் (ட்யூஷன்), பயிற்சி வகுப்புகளுக்கும் பல லட்சம் கட்டிப் படித்தவன் பட்டம் வாங்கியவுடன் வெளிநாட்டுக்குப் பறக்கவோ, பெருநகரங்களில் செல்வம் கொழிக்கும் மருத்துவமனைகளில் பணிபுரியவோ, மருத்துக் கம்பெனிகளின் லாப வெறிக்குத் துணைபோகவோ, உடல் உறுப்புகளைத் திருடி விற்கவோ மாட்டான் என்று எப்படி நம்புவது?

அதுவே சிறுவயதுமுதல் ஆசையின் காரணமாகவோ, ஆர்வத்தின் காரணமாகவோ, அனுபவத்தின் காரணமாகவோ ஒரு துறை மீது ஈடுபாடு வந்து, அதனால் அந்தத் துறையில் படிக்க விரும்பும் ஒருவனுக்கு வாய்ப்புக்கொடுப்பதே சரியானதாக இருக்கும். இப்படி வாய்ப்பு மறுக்கப்பட்ட எத்தனையோ அறிவாளிகள் இன்று கிடைத்ததைப் படித்துவிட்டு வேண்டாவெறுப்பாக வேலைபார்க்கிறார்கள். இதுதான் ஆர்வத்திற்கு திறமைக்கும் கிடைக்கும் மரியாதையா? பள்ளிகளில் சுமாராகப் படிப்பவர்கள் கல்லூரிகளில் நன்றாகக் படிப்பதும் இதுவே தலைகீழாக நடப்பதும் யாரும் அறியாததல்ல. அப்படி இருக்க 8.5 லட்சம் பேர் எழுதும் தேர்வில், மாநில அளவில் முதல் 1000 இடங்கள் எடுத்தால் மட்டுமே நல்ல கல்லூரிகளில் நினைத்த துறையில் கல்வி என்றால் இதுவே ஒரு வக்கிரமான அமைப்பு இல்லையா?

ஆகவே விருப்பம் இருப்பவன் விரும்பும் படிப்பைப் படிக்க வகைசெய்ய வேண்டும். "இதனால் எல்லோரும் மருத்துவம் படித்துவிடுவார்கள்" என்று நினைக்கிறீர்களா? அதுவும் நடக்கலாம். ஆனால் அதைத் தடுக்க ஒரு வழியுண்டு. எல்லா வேலைகளுக்கும் இருக்கும் வருமான இடைவெளியை (pay gap) நீக்குவதன் மூலம், "இந்தப் படிப்பு படித்தால் நிறய சம்பாதிக்கலாம்" என்ற எண்ணம் முதலில் நீக்கப்பட வேண்டும். இதுவே எல்லாப் பிரச்சனைகளுக்கும் மூல காரணம். இதைச் சொன்னால் நம்மை கம்ம்யூனிஸ்ட் என்பார்கள். ஆனால் இதுபோன்ற சமதர்மம் நிலவும் நாடுகளுக்கு ஆன்சைட் கிடைக்காதா என்று காத்துக்கிடக்கும் மேன்மக்களே இங்கு அதே சமதர்மம் வரக்கூடாது என்பதில் மிகக்கவனமாக இருக்கிறார்கள்.

சரி, தற்போதுள்ள முதலாளித்துவ முறையில்கூட இது எப்படி இயங்கும்? எல்லோரும் மருத்துவமோ, பொறியியலோ படித்தாலும் பெரிதாக ஒன்றும் இழப்பு ஏற்படாது. தெருவுக்குத் தெரு மருத்துவர்களும் பொறியாளர்களும் வேலை இல்லாமல் வீட்டில் இருப்பார்கள். நாளடைவில் தானாக எந்தத் துறைகளில் வேலைவாய்ப்பு இருகிறோதோ அந்தத் துறையில் அதிக மாணவர்கள் சேர்வார்கள். இதைத்தானே நீங்கள் "Free Market Capitalism" என்று பீத்துகிறீர்கள்? அதைக் கல்வியிலும் கொண்டுவரலாமே? வேண்டிய படிப்புகளை வேண்டியவர்கள் படிக்கட்டும். அவர்கள் பார்க்கும் வேலையின் தரத்தைப் பொறுத்து அவர்கள் தொழில் முன்னேற்றம் இருக்கட்டும்! வாய்ப்பு மறுக்கப்படுவதுதான் உங்கள் "Free Market Capitalism" லட்சணமா?

எதற்க்கெடுத்தாலும்  "survival of the fittest" என்று டார்வீனியாக் கோட்பாடு பேசுகிறார்கள். நான் பரிணாமக் கோட்பாட்டை நன்றாகக் படித்தவன். "Survival of the fittest"-க்கு இவர்கள் சொல்லும் விளக்கம் எந்த நூலிலும் இல்லை. என்னவேண்டுமானாலும் செய்து எப்படியும் தான் ஆசையை நிறைவேற்றிக்கொள்வது "survival of the fittest" இல்லை. அதற்குப் பெயர் "unethical cut-throat competition". முதலாளித்துவமும் இங்கு நிலவும் சாதிய சமூகமும் உருவாக்கியுள்ள இந்த மனநோயைத்தான் இவர்கள் "survival of the fittest" என்று பூசி மொழுகுகிறார்கள்.

அனிதாவின் பெயரைக் குறிப்பிடாமல் என்னால் கடந்துசெல்ல முடியவில்லை. 1176 எடுத்த காரணத்தால் அல்ல. அனிதா 800 மதிப்பெண் எடுத்திருந்தாலும் அவர் மருத்துவர் ஆக எல்லாத் தகுதியும் பெற்ற ஒருவர். எப்படி? மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து மருத்துவத்திற்கு காசில்லாமல் தன் தாயைப் பறிகொடுத்த அனிதாவைவிட யார் மருத்துவராகத் தகுதி உள்ளது? அவர் மருத்துவர் ஆகியிருந்தால் எல்லோருக்கும் இலவச சேவை செய்வார் என்று சொல்லவில்லை. ஆனால் கண்டிப்பாக காசு கொடுத்து இடம் பிடித்த "survival of the fittest"களைக் காட்டிலும் கருணையும், சமூக அக்கறையும் உள்ள மருத்துவராக இருந்திருப்பார். அது எவரும் மறுக்க முடியாத உண்மை. உங்களுக்கு வேண்டுமானால் பெரிய பெரிய மருத்துவமனைகளில் பெரிய பெரிய தகுதித் தேர்வுகள் எழுதிவந்த மருத்துவர்கள் தேவைப்படலாம். ஆனால் பெரும்பான்மை மக்களுக்கு அனிதாவைப் போன்ற மனசாட்சியுள்ள, எல்லா நோயாளிகளையும் மறைந்த தன் தாயாகப் பார்க்கும் மருத்துவர்களே தேவை. அப்படிப்பட்ட மருத்துவர்களை உருவாக்கமுடியாத சமூகம்தான் தூக்கில் தொங்கவேண்டும்.

முடிவாக
  • நீட் விலக்குப் பெறுதல் தாற்காலிகத் தீர்வு.
  • நீட்டை நீக்குவது குறுகிய காலத் தீர்வு.
  • விரும்பியவர் விரும்பிய படிப்பை விலையில்லாமல் படிக்கவும், தொழில்களிடையேயும் தொழிலாரகளிடமும் சமத்துவமும் சமநீதியும் நிலவ வழிசெய்யும் பொதுவுடைமைச் சமூகம் படைப்பதே நிரந்தரத் தீர்வு!

Wednesday, August 30, 2017

சோவியத் ஒன்றியம் என்ன கிழித்தது?

சோவியத் ஒன்றியம் வீழ்ந்துவிட்டதால் பொதுவுடைமைச் சித்தாந்தமே வீழ்ந்துவிட்டதாக பெரும்பான்மையானோர் கருதுகிறார்கள். ஒரே ஒரு நடைமுறை அமலாக்கம் தோல்வியுற்றதால் அந்த கருத்தாக்கமே தோல்வியடைந்துவிட்டதாக முடிவுகட்டிவிடலாமா? அப்படிப் பார்த்தால் சில ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் பொருளாதார வீழ்ச்சிகள், தாராளமயம்/உலகமயம் அறிமுகமாகிய சில காலத்திலேயே வறுமையிலும், குளறுபடிகளிலும் சிக்கும் எண்ணற்ற நாடுகள் போன்றவை முதலாளித்துவத்தின் தோல்வி என்று ஏன் நாம் எடுத்துக்கொள்வதில்லை? வரலாறு வெற்றிபெற்றவர்களால் எழுதப்படுகிறது என்றால் பரவாயில்லை. சமகாலத்தில் நடந்த நிகழ்வுகளும் திரித்துக்கூறப்படுவது சரியா? நாம் ஒன்றும் சில நூற்றாண்டுகளோ பல ஆயிரம் ஆண்டுகளோ முந்தைய பழைய வரலாற்றைப் பற்றி பேசவில்லை. இன்று 25 வயதுக்கு மேல் உள்ளவர்கள் பிறந்தபோது சோவியத் ஒன்றியம் உயிரோடு இருந்தது. வெறும் 25 ஆண்டுகள்... நம் அம்மா அப்பா, தாத்தா பாட்டி என்று எல்லோரும் பார்த்து, கோட்டு, வாழ்ந்த காலத்தில் நடந்த சம்பவங்கள் எப்படி இருட்டடிப்பு செய்யப்பட்டன? பொதுப்புத்தியில் இருந்தே அழித்தொழிக்கப் பட்டுவிட்டதே?

வணிகவியல், பொருளாதாரம் போன்ற பட்டப் படிப்பு படித்தவர்களிடம்கூடக் கேளுங்கள், "பங்குச் சந்தையே இல்லாமல் அவ்வளவு பெரிய பொருளாதாரம் கிட்டத்தட்ட 75 ஆண்டுகள் பல சோதனைகளைக் கடந்து பற்பல  சாதனைகளைப் புரிந்து வெற்றிநடை போட்டது அவர்கள் பாடத்தில் உண்டா?" என்று. பலருக்கு அது தெரியவே தெரியாது. சிலர் சோவியத் ஒன்றியத்தை நேரடியாக அமெரிக்காவோடோ, ஐரோப்பிய நாடுகளோடோ ஒப்பிட்டு அதன் சாதனைகளை சிறுமைப்படுத்துவதும் உண்டு. அமெரிக்கா போல அடிமைகளின் உழைப்புச் சுரண்டலோ, ஐரோப்பிய நாடுகள் போல காலனிய ஏகாதிபத்தியச் சுரண்டலோ இல்லாமல் வெறும் 75 வருடம் நடந்த பொதுவுடைமை ஆட்சியை பலநூறு ஆண்டுகளாக அடாவடி ஆட்சி புரிந்த நாடுகளுடன் ஒப்பிடுவதா? இதுதான் கல்வி அவர்களுக்குக் கொடுக்கும் புரிதலா?

"ஸ்டாலின் கொடுங்கோல் ஆட்சி புரிந்தார். சோவியத் மக்கள் பஞ்சம் பட்டினியில் செத்தார்கள். அங்கு சுதந்திரமே கிடையாது." என்பன போன்ற பல்வேறு கருத்துக்கள் மக்கள் மத்தியில் நிலவுகின்றன. அவற்றை எல்லாம் இப்போது பேச விரும்பவில்லை. ஒரு பொருளாதார சக்தியாக சோவியத் ஒன்றியத்தின் சாதனைகள் என்ன? 1917ஆம் ஆண்டு நடந்த புரட்சியின் போது, விவசாயக் கூலிகள் பெரும்பான்மையாக வாழ்ந்த, தொழில் புரட்சிக்கு முற்பட்ட, கல்வி அறிவு, மின்சாரம் போன்ற எந்த முன்னேற்றமும் இல்லாத ஒரு மன்னராட்சி நாடகத் தொடங்கிய இவ்வொன்றியம் என்னவெல்லாம் சாதித்தது என்று பார்ப்போம்.

1. அனைவருக்கும் உணவு உறுதிப்படுத்தப் பட்டது. இன்றும் கூட இதுபோன்ற ஒரு உத்திரவாதம் வளர்ந்தநாடுகள் என்று சொல்லிக்கொள்ளும் நாடுகளில்கூட இல்லை!

2. மின்சாரம், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் அனைவருக்கும் விலையில்லாமல் கொடுக்கப்பட்டது.
3. அனைவருக்கும் கல்வி உறுதிசெய்யப்பட்டது. கட்டாய, விலையில்லா கல்வி, வயது, இனம், மதம் மற்றும் பாலின வேறுபாடு இல்லாமல் எல்லோரையும் சென்றடைந்தது.

4. உலக அளவில் பெரிய அம்மை நோய் ஒழிப்பில் சோவியத் ஒன்றியத்தின் பங்கு மிகப் பெரியது.
5. உலகிலேயே அதிக புத்தகங்களை அச்சிட்ட நாடு. உலகின் மீத எல்லா நாடுகளும் அச்சிட்ட அளவை விட அதிக நூல்களை அச்சிட்ட பெருமை சோவியத் ஒன்றியத்தைச் சேரும். உலக மொழிகள் பலவற்றிலும் நல்ல நூல்களை தயாரித்து மலிவு விலையில் ஏற்றுமதியும் செய்தது. தமிழில்கூட பல நூல்கள் வெளியிடப்பட்டன.

6. 15% மக்கள்தொகை வளர்ச்சி இருந்த காலத்தில் 55% தொழில் வல்லுநர்கள் வளர்ச்சியை எட்டியது.
7. இசை மற்றும் இதர கலைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப் பட்டது. பெரும்பான்மை மக்கள் இசைக்கருவிகளை வாசிக்கத் தெரிந்தவர்களாக இருந்தனர்.

8. வணிகமயமாக்கப்படாத கல்வி, பொழுதுபோக்கு, தொலைகாட்சி போன்றவை மக்களிடமும் இளைய தலைமுறையினரிடமும் நல்ல விஷயங்களை மட்டுமே எடுத்துச் சென்றன.
9. அனைவருக்கும் விலையில்லா, தரமான மருத்துவம் கொடுத்த முதல் நாடும் இதுவே!

10. பெண்களுக்கு ஆண்களுக்கு நிகரான ஊதியம் உறுதிசெய்யப்பட்டது.
11. பெண்கள் கல்வி, பொருளாதாரம், அரசியல் போன்ற துறைகளில் பங்கேற்க இருந்த தடைகள் தகர்க்கப்பட்டன.

12. உடல் உறுப்புகள் தானம்/மாற்று அறுவைசிகிச்சைகள் முதலில் வந்ததும் இங்குதான்.
13. புரட்சிக்கு முந்தைய காலத்தை ஒப்பிடும்போது சராசரி ஆயுள்காலம் இரட்டிப்பானது.

14. குழந்தைகள் இறப்பு விகிதம் பத்தில் ஒரு பங்காகக் குறைந்தது.
15. 1972க்குள் 4,84,000 மருத்துவர்கள் மற்றும் 22,24,000 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனைகள் என்று மருத்டுவத்துறை அபரீத வளர்ச்சி அடைந்தது.

16. பல்வேறு இன, மத, மொழி மற்றும் கலாச்சாரப் பிரிவுகள் இருந்தாலும் ஒப்பீட்டளவில் அமைதியும் ஒற்றுமையும் நிலவியது.
17. இன்று ஐரோப்பியர்கள் நிம்மதியாக இருப்பதற்கு இந்தியா மற்றும் ஆப்பிரிக்க காலனிகளில் இருந்து வந்து இரண்டாம் உலகப்போரில் சண்டையிட்ட வீரர்கள் காரணம். அதுபோல உலகையே அச்சுறுத்திய நாஜி ஜெர்மனியை வீழ்த்த சோவியத் வீர்கள் செய்த தியாகமும் மிகப் பெரியது. கிட்டத்தட்ட 2 கோடி உயிர்களை தியாகம் செய்து ஹிட்லரை வீழ்த்தியது.

18. இந்த பொதுவுடைமை சமுதாயத்தை முளையிலேயே கிள்ளி எரித்துவிட 14 முதலாத்துவ நாடுகள் ஒன்றுதிரண்டு போர்தொடுத்தன. மேலும் உள்நாட்டு சாதிகளும் செய்யப்பட்டன. ஆனால் எல்லாவற்றையும் முறியடித்து சுயமாக முன்னேறி வந்தது சோவியத் ஒன்றியம்.
19. மின்சார  ரயில்,அணுமின் நிலையங்கள், பெரிய அணைகள், பசுமைப் புரட்சி, பற்பல அறிவியல் முன்னேற்றங்கள் என்று 5 ஆண்டுத் திட்டங்கள் மூலம் பல்வேறு துறைகளிலும் சாதனைகள் நிகழ்த்தப்பட்டன.

20. வெறும் 40 வருடங்களில் குதிரை வண்டிகளில் போய்க்கொண்டிருந்த மன்னராட்சி, விண்வெளியை எட்டிப்பிடித்த மக்களாட்சியாக மாறியது. சோவியத் விண்வெளியில் செய்த சாதனைகள் தனிப் பதிவாகவே போடவேண்டும்! [இங்கே படிக்கவும்]

இப்போது சொல்லுங்கள். வெறும் 75 ஆண்டுகள்கூட முழுதாக இல்லாத இந்த பொதுவுடைமை கூட்டமைப்பின் சாதனைகள் நாம் எளிதில் கடந்துசெல்லக்கூடியாவைகளா?

நன்றி: http://www.northstarcompass.org

விண்வெளி ஆராய்ச்சியில் சோவியத் ஒன்றியத்தின் சாதனைகள்

1957: முதல் கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணை - ஆர் 7 செம்யோர்க்கா
1957: முதல் புவியை சுற்றும் செயற்கைக்கோள் - ஸ்புட்னிக் 1
1957: விண்வெளியில் முதல் உயிரினம் - லைக்கா (நாய்) - ஸ்புட்னிக் 2
1959: புவியின் ஈர்ப்பைத் தாண்டிய முதல் ஏவுகணை - லூனா 1
1959: புவியிலிருந்து விண்வெளிக்கு நடந்த முதல் தொலைத்தொடர்பு - லூனா 1
1959: நிலவின் அருகில் சென்ற முதல் செயற்கைக்கோள் - லூனா 1
1959: நிலவில் இறங்கிய முதல் விண்கலம் - லூனா 2
1959: நிலவின் பின்புறத்தை ஆராய்ந்த முதல் செயற்கைக்கோள் - லூனா 3
1960: செவ்வாய் நோக்கி ஏவப்பட்ட முதல் விண்கலம் - மார்ஸ்னிக் 1
1961: வெள்ளியை நோக்கி ஏவப்பட்ட முதல் விண்கலம் - வெனீரா 1
1961: விண்வெளியில் முதல் மனிதன் - யூரி ககாரின்- வோஸ்டோக் 1
1961: ஒருநாள் முழுவதும் விண்வெளியில் சுற்றிய முதல் மனிதன் - கெர்மன் டிடோவ் - வோஸ்டோக் 2
1962: ஒரே சமயத்தில் இரு விண்வெளி வீரர்கள் - வோஸ்டோக் 3 மற்றும் வோஸ்டோக் 4
1963: விண்வெளியில் முதல் பெண் - வாலெண்டின டெரெஷ்கோவ் - வோஸ்டோக் 6
1964: மூன்று விண்வெளி வீரர்கள் ஒரே கலத்தில் - வோஸ்கோத் 1
1965: முதல் விண்வெளி நடை - அலெக்சி லியோனோவ் - வோஸ்கோத் 2
1965: வேறு கோளை அடைந்த முதல் விண்கலம் - வெனீரா 3
1966: நிலவில் தரையிறங்கிய முதல் விண்கலம் - லூனா 9
1966: நிலவன் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட முதல் கலம் - லூனா 10
1967: ஆளில்லா விண்கலங்கள் சந்திப்பு - காஸ்மோஸ் 186 & காஸ்மோஸ் 188
1969: இரு விண்கலங்கள் சந்தித்து அதில் இருந்த மனிதர்கள் இடம் மாறியது - சோயூஸ் 4 & சோயூஸ் 5
1970: புவியில் இருந்து நிலவுக்கு முதல் தகவல் அனுப்பப்பட்டது - லூனா 16
1970: நிலவில் முதல் நகரும் கலம் - லூனாகோத் 1
1970: வேறு கோளில் இருந்து வந்த முதல் தகவல் - வெனீரா 7
1971: முதல் விண்வெளி நிலையம் - சல்யூட் 1
1971: செவ்வாயைச் சுற்றிய மற்றும் தரை இறங்கிய முதல்  விண்கலம் - மார்ஸ் 2
1984: விண்வெளியில் நடந்த முதல் பெண் - ஸ்வெட்லானா சவிட்ஸ்கயா - சல்யூட் 7
1986: இரு விண்வெளி நிலையங்களுக்குச் சென்ற முதல் குழு - சல்யூட் & மிர் (7 நபர்கள்)
1986: முதல் நிரந்தர விண்வெளி ஆய்வு நிலையம் - மிர் 1986 - 2001
1987: ஒருவருடத்திற்கு மேல் விண்வவெளியில் கழித்த முதல் குழு - விளாடிமிர் டிடோவ் & மூஸா மனரோவ் - மிர்

நன்றி: விக்கிபீடியா, http://www.northstarcompass.org

Friday, August 11, 2017

"துளிர்"க்கட்டும் அறிவியல் ஆர்வம்

உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் வயது முதிர்ந்தோர்வரை அனைவரும் அறிவியல் ஆர்வம் பெற்றிருப்பது இன்றைய சூழலில் மிக முக்கியமான ஒன்று. ஆனால் சமூக வலைத்தளங்களாகட்டும், தொலைக்காட்சியாகட்டும், அச்சு ஊடகங்களாகட்டும், எங்கு திரும்பினாலும் போலி அறிவியலின் தாக்குதல் எட்டுத்திக்கும் இருந்து சீறிப்பாய்கிறது. திரைப்படங்களைச் சொல்லவே வேண்டாம். "மனிதனின் சராசரி ஆயுள்காலம் 300 வருடம்" என்றெல்லாம் வசனம் பேசி கைதட்டலும் காசும் சம்பாதித்துவிட்டு அவர்கள் தப்பித்துவிடுகிறார்கள், பார்க்கும் நம் மக்களோ அறிவைத்தொலைத்துவிட்டு மூடமயக்கத்தில் தடுமாறுகிறார்கள். அறிவியல் பற்றிய பத்திரிக்கைகள் வெகு சிலவே கிடைக்கின்றன. அவற்றில் பெரும்பாலானவை விலை அதிகமுள்ளவையாகவும், ஆங்கிலப் பாதிப்புகளாகவும் உள்ளன. தமிழில் ஒரு நல்ல அறிவியல் பத்திரிகை இருந்தால்? அதுவும் அது குறைந்தவிலையில் எல்லோரும் வாங்கிப் பயன்பெறும் வகையில் இருந்தால்? எவ்வளவு நன்றாக இருக்கும்?
அப்படி ஒரு மாத இதழ் இருக்கிறது! தமிழ்நாடு மற்றும் புதுவை அறிவியல் இயக்கங்கள் இணைந்து வெளியிடும் இந்த மாத இதழ், "துளிர்" என்ற பெயரில் வெளிவருகிறது. இதழ் ஒன்றுக்கு 10 ரூபாய் என்கிற நம்பமுடியாத விலையில் கிடைக்கிறது. வெறும் 100 ரூபாய் சந்தா செலுத்தினால் ஒரு ஆண்டு முழுவதும் உங்கள் வீடு தேடியே வரும்! சற்று சிந்தித்துப்பாருங்கள். ஒரு திரைப்படம் பார்க்க இதைவிட அதிகம் செலவாகும். ஒரு சின்ன பொம்மை இதைவிட அதிக விலை இருக்கும். உங்கள் வீட்டுக் குழந்தைகளுக்கோ, அல்லது உங்கள் உறவினர்/நண்பர்கள் வீட்டுக் குழந்தைகளுக்கோ ஒருவருட சந்தாவைக் கட்டி அவர்கள் வீடுதேடி இவ்விதழ் மாதம்தோறும் வரும்வகையில் ஒரு அன்பளிப்பைத் தரலாம். நீங்களும் இவ்விதழை தொடர்ந்து வாசிப்பதன் மூலம் உங்கள் அறிவியல் அறிவை கூர்மையாக வைத்துக்கொள்ளலாம்.

பள்ளியில் படிக்கும் அறிவியல் கருத்துக்கள் சரியாகப் புரியாமலோ அல்லது அறிவியல் ஆர்வத்தின் மிகுதியிலோ குழந்தைகள் எழுப்பும் கேள்விகள் ஏராளம். ஆனால் பொறியியலோ மருத்துவமோ பயின்ற பெற்றோர்கள்கூட அக்கேள்விகளுக்கு பதிலளிக்கத் தடுமாறும் நிலையில் உள்ளனர். இதுவே அவர்களிடம் ஏதாவது மூடநம்பிக்கைகள் குறித்துக் கேட்டுப் பாருங்கள்? பக்கம் பக்கமாக விளக்குவார்கள். ஆனால், உங்கள் வீட்டில் துளிர் இதழ் இருந்தால், நீங்களும் உங்கள் அறிவியல் அறிவை வளர்த்துக்கொண்டு இளைய தலைமுறைக்கும் பயன்படும் வகையில் அதைப் பயன்படுத்தலாம். வீட்டில் உள்ள தாத்தா பாட்டிகள்கூட தங்கள் ஓய்வு நேரத்தில் "துளிர்" இதழை வாசித்து, அதில் உள்ள தகவல்களை எளிய கதைகளாக குழந்தைகளுக்குச் சொல்லலாம்.

துளிர் அறிவியல் மாத இதழை உங்கள் வீட்டிற்கே வரவழைக்க, கீழ்காணும் வழிகளில் தொடர்புகொள்ளலாம்.

முகவரி:

துளிர் நிர்வாக அலுவலகம்,
245, அவ்வை சண்முகம் சாலை,
கோபாலபுரம்,
சென்னை 600 086

தொலைப்பேசி எண்: 044 28113630

மின்னஞ்சல் முகவரி: thulirmagazine@gmail.com

சந்தா விவரங்கள்:
ஒரு இதழ்: ரூ. 10/-
ஆண்டுச் சந்தா: ரூ. 100/-
ஆண்டுச் சந்தா (வெளிநாடுகளுக்கு): $ 20
ஆயுள்ச் சந்தா: ரூ. 1000/-

Wednesday, August 9, 2017

வந்தேறிச் செடிகள்!

இன்று எல்லாப் பொருட்களிலும் பழமை நல்லது, புதுமை கெட்டது என்று ஒரு கருத்து நிலவுகிறது. ஏதாவது ஒரு புதிய கண்டுபிடிப்போ, உணவோ, மருந்தோ, உடையோ வந்தால் போதும்! "ஐயோ! நம் முன்னோர்கள் பாரம்பரியம் எல்லாம் போச்சே! பழமையை அழித்துவிட்டோமே! புதியவற்றால் தீமைகள்தான் வரும்!" என்றெல்லாம் முட்டி மோதும் கூட்டம் எங்கிருந்தாவது கிளம்பிவருகிறது. இவர்கள் கூற்றின் படி, நம் முன்னோர்களும் புதுமைகளை ஏற்காமல் இருந்திருந்தால் என்னவாகி இருக்கும்?

வேட்டையாடிய மனிதன் விவசாயத்தைக் கண்டுபிடித்தபோது இதேபோல "நம் முன்னோர்கள் விவசாயம் செய்யவில்லை. விவசாயத்தால் காடுகள் அழியும். அரிசி, கோதுமை போன்ற பயிர்கள் செயற்கையாக மனிதனால் உருவாக்கப்பட்டவை. இவற்றை உண்டால் நோய் வரும்!" என்றெல்லாம் போராட்டம் நடந்திருந்தால் என்னவாகி இருக்கும்? அல்லது நெருப்பை மூட்ட மனிதன் கற்ற காலத்தில், "நெருப்பு ஆபத்தானது! அதை நம் வீட்டுக்குள் கொண்டு வருவது கூடாது! அதனால் காற்று மாசு படுகிறது!" என்று ஒரு கூட்டம் கோஷம் போட்டிருந்தால் எப்படி இருக்கும்? இப்படியே சக்கரம், படகுகள், ஆடை, சமைத்த உணவு, உணவில் உப்பு சேர்ப்பது போன்ற ஒவ்வொரு மாற்றத்தையும் பழமைவாதிகள் எதிர்த்திருந்தால் நாம் இன்று மகிழ்ச்சியாக மரத்தில் தாவிக்கொண்டு இருந்திருக்கலாம்!

இப்படிப் பழம்பெருமை பேசும் பலருக்கும், நம் முன்னோர்கள் புதுமையை வரவேற்று ஏற்றுக்கொண்டு முன்னேறியவர்கள் என்பது தெரியாது. இன்று அவர்கள் பழமை என்று தூக்கிப்பிடிக்கும் பலவும் சில நூற்றாண்டுகளுக்கு முன் புதுமையாக நம் முன்னோர்கள் பார்த்தவையே! "நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல!" என்ற இவர்கள் கூற்றுப்படியே பார்த்தாலும், நம் முனோர்களைப் போல நாமும் புதுமையைக் கண்டு அஞ்சாமல், அதை ஆராய்ந்து ஏற்பதே நல்லது.

அவ்வகையில் நம் முன்னோர்கள் சில நூற்றாண்டுகளுக்கு முன் ஏற்றுக்கொண்ட புதுமைகள் சிலவற்றைப் பார்ப்போம். இந்தப் புதுமைகள் இன்று எவ்வாறு பழமைகளாகப் பார்க்கப்படுகின்றன என்று கவனியுங்கள். ஒரு குறுகிய வலைப்பதிவில் எல்லாவற்றையும் சொல்ல முடியாததால், 1492ஆம் ஆண்டு கிறிஸ்டோபர் கொலம்பஸ், அமெரிக்க கண்டங்களைக் கண்டறிந்த பின், அக்கண்டங்களில் இருந்து ஐரோப்பியர்கள் மூலம் நம் நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட சில தாவர வகைகளை மட்டும் பார்ப்போம். அதாவது, ஏறத்தாழ 500 ஆண்டுகளுக்கு முன், இந்தத் தாவரங்களோ அவை தரும் காய்கனிகளோ, நம் முன்னோர்கள் பார்த்திருக்கக் கூட மாட்டார்கள். ஆனால் இந்தப் பட்டியலில் உள்ள பலவும் இன்று நம் "பண்பாடு, பாரம்பரியம், மரபு" வட்டத்துக்குள் இருப்பதைக் கவனியுங்கள். இன்னும் 500 வருடங்களில், பிட்சாவும், நூடுல்சும் நம் பரம்பரியமானாலும் வியப்பதற்கல்ல!

குடை மிளகாய் - சில்லி சிக்கன் முதல் பச்சடி வரை...

முந்திரிப்பருப்பு - இது இன்று நம் பாரம்பரிய உணவாகப் பார்க்கப்படும் ஒன்று. முந்திரி பக்கோடா, முந்திரி அல்வா, முந்திரி ஸ்வீட், பொங்கல், லட்டு, பாயசம்,புலவு என்று நம் பாரம்பரிய உணவுகள் பலவும் முந்திரியால் சிறப்புப் பெறுகின்றன. "முந்திரிக்கொட்டை போல" என்ற வழக்கும்கூட நம் மொழியில் இருப்பது வியப்பே!

மிளகாய் - மீன்குழம்பு, சாம்பார், சட்டினி, வடை, இட்டிலிப் பொடி இப்படி எது எடுத்தாலும் மிளகாய்ப் பொடி இல்லாமல் ருசிக்குமா? ஒருநாள் உங்கள் சமையலறையில் மிளகாய்ப் பொடி டப்பாவை ஒளித்துவைத்துவிட்டு சமையல் செய்ய முயலுங்கள். நீங்கள் தமிழரின் பாரமபரிய உணவுகள் என்று நம்பும் பலவும் இந்த அமெரிக்க இறக்குமதி இல்லாமல் சமைக்க முடியாது! இதில் இந்த மிளகையைக் கொண்டு திருஷ்டி கழிப்பது, வாகனங்களைப் பாதுகாப்பது போன்ற விஞானங்கள் வேறு! 500 வருடங்களுக்கு முன் இல்லாத இந்தப் பழக்கங்கள் இன்று நம் பண்பாடு என்று சொல்லும் மனிதர்களை என்னவென்பது?

சீதா/ராமன்-சீதா பழம் - பெயரளவில் நம் நாட்டு இதிகாசங்களின் தாக்கம் இருந்தாலும் இதுவும் வெறும் 500 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் இருந்து இறக்குமதியானதே!

கொய்யாப் பழம் - நம் ஊர்களில் பாட்டிகள் கூடை தூக்கி விற்பார்களே! அதேதான். அதுவும் அமெரிக்க இறக்குமதியே!

மக்காச் சோளம் - இரும்புச் சோளம் மற்றும் இதர சோளங்கள் ஏற்கனவே இருந்தாலும், மக்காச் சோளம் புதுவரவே! இதில் நாட்டு மக்காச் சோளம், அமெரிக்கன் ஸ்வீட் கார்ன் என்று நாம் வகை பிரித்தாலும் இரண்டுமே அமெரிக்காவைத் தாயகமாகக் கொண்டவையே!

மரவள்ளிக் கிழங்கு - கிராமிய உணவாகப் பார்க்கப்படும் இதுவும் சில நூற்றாண்டுகளாக இங்கு வந்தேறிய பயிர்!

பப்பாளி - மெக்சிக்கோ நாட்டைத் தாயமாகக் கொண்ட மரம். இந்த மரத்தின் இலைச்சாறு டெங்குவைக் குணப்படுத்தும் என்று அரசாங்கமே விளம்பரம் போடுகிறது. ஆனால் இதன் தாயகமான மெக்சிக்கோவிலோ டெங்குவிற்கு தடுப்பூசி போடுகிறார்கள்!  இதைச் சிலர் சித்த மருத்துவம் என்றுகூடச் சொல்கிறார்கள். எந்தச் சித்தர் எந்த நூலில் பப்பாளி பற்றிக் குறிப்பெழுதியுள்ளார்? சுட்டிக்காட்டினால் நன்றாக இருக்கும்.

நிலக் கடலை - கடலை போடுவது முதல் "பாரம்பரிய மரச்செக்கு கடலெண்ணெய்" வரை கடலை நம் உணவிலும் வாழ்விலும் கலந்த ஒன்று. ஆனால் ஒரு 600 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த நம் முன்னோர்கள் இதைக் கண்ணால்கூடப் பார்த்ததில்லை! கடலை மிட்டாய், கடலை எண்ணெய் பலகாரம் இதெல்லாம் நம் பாரம்பரியம் என்று நம்புபவர்கள் பலர். உண்மையில் இது சில நூற்றாண்டுகளுக்கு முன் வெள்ளையர்களால் கொண்டுவரப்பட்ட பயிரே!

அன்னாசிப் பழம் - எனக்கு மிகவும் பிடித்த பழம். தனியாக ஒரு முழு பழத்தைக் கூட சாப்பிட்ட நாட்கள் உண்டு! பிரேசில் நாட்டைத் தாயகமாக் கொண்டது இப்பழம்.

உருளைக்கிழங்கு - மற்றுமொரு "பாரம்பரியம்". பூரி கிழங்கு முதல் ஆலு பரோட்டா வரை! வட நாட்டின் உயிர் மூச்சான இந்த "ஆலு" அமெரிக்காவில் இருந்து வந்த "விதேசி" பயிர். அமெரிக்க விதேசி பயிரான உருளைக்கிழங்கைத் தடை செய்துவிட்டால் வடாஇந்தியர்கள் பாடு திண்டாட்டம்தான்!

பூசணி - பரங்கிக்காய் (வெள்ளைப் பூசணி ஆசியாவைத் தாயகமாகக் கொண்டது!)

சப்போட்டா - "சிக்கு" என்று வடஇந்தியர்களால் (வடஇந்தியத் தாக்கம் உள்ள தமிழர்களினாலும்) அறியப்படும் இப்பழம் மெக்சிகோ இறக்குமதி.

சூரியகாந்தி - எண்ணெய் வித்தாகப் பயன்படும் இப்பயிர் வடஅமெரிக்க கண்டத்தில் இருந்து வந்தது.

சர்க்கரைவள்ளிக் கிழங்கு - பெயரைக்கேட்டால் தூய தமிழாகத்தான் உள்ளது... ஆனால் சொந்த ஊர் தென்-அமெரிக்கா.

புகையிலை - புகையிலைப் பாக்குகளைக் குதப்பி, அங்கங்கு துப்பி வைப்பது வடஇந்தியர்கள் நடமாடும் பகுதி என்பதன் அடையாளம் என்று சொல்லும் அளவுக்கு நம் "கலாச்சாரத்தில்" கலந்தது இந்தப் புகையிலை. வெற்றிலையோடு புகையிலை போடும் பழக்கம் தமிழகத்திலும் இருந்தது (இன்னும் சிலரிடம் இருக்கிறது). எல்லாவற்றிற்கும் மேல், சில தெய்வங்களுக்கு சுருட்டு படைத்து வழிபாடும் வழக்கம் உள்ளது. இந்த எல்லா "பாரம்பரியங்களும்" வெள்ளைக்காரன் கொண்டுவந்த உயிர்கொல்லிப் புகையிலைமீது கட்டப்பட்டுள்ளது!

தக்காளி - கிலோ 120 ரூபாய் விற்றாலும் தக்காளி இல்லாமல் சமையல் செய்ய முடியாமல் வங்கியில் கடன் வாங்கியாவது தக்காளி வாங்குகிறோம் அல்லவா? அந்தத் தக்காளியும் வெள்ளைக்காரன் கொண்டுவந்ததுதான். ரசம், சாம்பார், குழம்பு என்று நீக்கமற நம் உணவில் நிறைந்துள்ள தக்காளி நம் முன்னோர்களுக்கு ஐரோப்பியர்கள் அறிமுகப்படுத்தியபோது புதுமையாகவே இருந்திருக்கும்.

முன்பே கூறியது போல நாம் இயல்பாக நம் மரபு, பண்பாடு, பாரம்பரியம் என்றெல்லாம் நம்பும் பலவும் நம் முன்னோர்களுக்கு புதியவையாகவும் அந்நியமாகவும் இருந்தவையே! அவர்கள் நம்மைப்போல முன்னோர் பெருமை பேசி இந்தப் புதுமைகளை ஏற்காமல் விட்டிருந்தால் வத்தல் குழம்பும் வஞ்சிர மீன் வறுவலும் நம் உணவுகளாக இருந்திருக்காது! புதுமைகள் எல்லாமே தீமை என்று எண்ணி அஞ்சாமல் அவற்றில் நல்லவற்றை எடுத்து தீயவற்றைத் தவிர்ப்போம்!