Thursday, July 13, 2017

கிஷ் ஓட்டம்

நன்றி: விக்கிமீடியா
ஒரு நேர்மையான விவாதம் கருத்துக்களை பரிமாறிக்கொள்ளவும் உண்மைகள் வெளிவரவும் உதவும். ஆனால் இன்று தொலைக்காட்சிகளிலும் சரி, சமூக வலைத்தளங்களிலும் சரி விவாதங்கள், சொற்கள் நிரம்பிய குப்பைத்தொட்டிகள் போலவே உள்ளன. "கிஷ் காலோப்" (Gish Gallop) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் "கிஷ் ஓட்டம்" என்ற ஒரு தவறான தர்க்க முறை (logical fallacy) குறித்துப் இங்கு பார்ப்போம். டுவேன் டால்பெர்ட் கிஷ் (Duane Tolbert Gish) ஒரு உயிர்வேதி அறிஞர் (Biochemist) மற்றும் இளம் புவி படைப்புவாதி (Young Earth Creationist). இவர் பொதுவாகத் தான் பங்கெடுக்கும் உரையாடல்கள் மற்றும் சொற்போர்களில்  கையாண்ட தவறான விவாத முறையே இன்று அவர் பெயரில் வளங்கப்பட்டு வருகிறது.

கிஷ் ஓட்டம் என்றால் என்ன?

எவ்வளவுதான் படித்தவராக இருந்தாலும், எவ்வளவு நினைவுத்திறன் கொண்டவராயினும், எல்லோர் அறிவுக்கும் ஒரு எல்லை உண்டு. திடீர் என்று ஒரு மேடையில் பல்வேறு தொடர்பற்ற, பொருளற்ற வாதங்களை அடுக்கிக்கொண்டே போனால், முதலில் எதை மறுப்பது, சொல்லியதில் எது உண்மை எது பொய், எப்படி பல்வேறு வாதங்களை ஒரு பதில்கொண்டு மறுப்பது போன்ற பல சிக்கல்கள் உருவாகும். இதனால் அவர்கள் தடுமாறுவதோ, அல்லது முழுமையான விடை சொல்லாமல் போவதோ இயல்பே! இத்தகைய வகையில் விவாதத்தில் வென்றது போன்ற ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்துவதுவே "கிஷ் ஓட்டம்" ஆகும்.

எடுத்துக்காட்டு

கிறிஸ்துமஸ் தாத்தா உண்டா இல்லையா என்று விவாதம் நடப்பதாக வைத்துக்கொள்வோம். வரலாறு மற்றும் அறிவியல் அறிஞர்களும், கிறித்துமஸ் தாத்தா உண்டு என்று நம்பும் சிறுவனும் பங்கெடுப்பதாகக் கொள்வோம். திடீர் என்று அந்தச் சிறுவன், "கிறித்துமஸ் தாத்தா இருப்பது, நாசா ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர், ஜான் வில்லியம்சன் எழுதிய 'வடதுருவ விசித்திரங்கள்' புத்தகத்தில் அவர் புகைப்படம் உள்ளது. சென்ற ஆண்டுகூட என் வீட்டிற்கு வந்து அவர் பரிசு கொடுத்தார். உலகில் என் போல 30 கோடி சிறுவர்கள் அவரை நம்புகின்றனர். நாங்கள் எல்லோரும் முட்டாள்களா, மயில் இறகு குட்டி போடும் பொது கிறிஸ்துமஸ் தாத்தா இருக்க முடியாத? அவர் தாத்தா என்பதால்தானே அவருக்கு தாடி இருக்கிறது? அதுவே அது பாட்டியாக இருந்தால் எப்படி தாடி இருக்கும்? தாடி வெள்ளையாய் இருப்பதே அவர் வயதான தாத்தா என்பதற்கு சான்று. இதுகூடப் புரியாமல் நீங்கள் எப்படி அறிஞர்கள்? 1932 வரை கிறிஸ்துமஸ் தாத்தா பச்சை சட்டைதான் போடுவார். பிறகு அது என் சிவப்பாக மாறியது என்று பெனெடிக் கிங்ஸ்லி என்ற வரலாற்று ஆய்வாளர் எழுதியுள்ளார்" என்று அடுக்கிக்கொண்டேய போகிறான்.
இப்போது நாம் எங்கிருந்து பதில் சொல்லத் தொடங்குவது? முதலில் அந்தச் சிறுவன் கூறியது போல ஆய்வாளர்களும், ஆய்வுகளும் உண்மையில் உள்ளனவா? அப்படி இருந்தாலும் அவை நம்பகத்தன்மை உள்ளனவா? இது உடனுக்குடன் அறியக்கூடியவை அன்று. இதில் இன்னொரு சிக்கலும் உள்ளது. அந்த ஆய்வாளர்களும், ஆய்வுகளும் உண்மையாக உள்ளவையே என்று நிறுவும் சுமை (burden of proof) யாருக்கு உள்ளது? உண்மையில் அது அந்தச் சிறுவனின் பொறுப்பு. ஆனால் இப்போது அப்படிப்பட்ட ஆய்வாளர்களும், ஆய்வுகளும் இல்லை என்று எதிர் அணி நிறுவ வேண்டும். மேலும் விவாதத்துக்குத் தொடர்பில்லாத கிறிஸ்துமஸ் தாத்தா ஆணா பெண்ணா, வயதானவரா இளைஞரா, அவரை எத்தனை சிறுவர்கள் நம்புகிறார்கள் போன்ற வாதங்களை முன்வைப்பதன் மூலம் விவாதம் திசைதிருப்பப்படுகிறது. இவை எல்லாவற்றிற்கும் ஒரே விடையையோ அல்லது ஒரு சில சிறு விடைகளையோ சொல்லி எதிர்கொள்ள முடியாது. ஆனால, அந்த மேடையில் பெரிய விளக்கங்களோ, ஆய்வுகளோ, நூல் தேடல்களோ மேற்கொள்ள நேரமும் வாய்ப்பும் கிடையாது. ஆகவே எதிர் அணி பாடு திண்டாட்டம்தான்.

தாக்கம்

இது போன்ற "கிஷ் ஓட்டங்களை" சமயப் பரப்புரை மற்றும் ஆன்மீக வியபாரம் செய்யும் ஆட்களிடம் அதிகம் பார்க்கலாம். ஒரு மேடையிலோ அல்லது தொலைக்காட்சியிலோ இவ்வாறு பேசுவதன் மூலம், தன் தரப்பு வாதங்கள் சரி போலவும், எதிர்தரப்பு அறியாமையில் மூழ்கியுள்ளது போலவும் காட்டிக்கொண்டு விவாதத்தில் வென்று விட்டது போல பெருமிதம் அடைகிறார்கள் இவ்ரகள். போலி அறிவியல் துணைகொண்டு பிழைப்பு நடத்தும் ஒட்டுன்னிகளும் இத்தகைய பேச்சுக்கள் மூலம் மக்களை முட்டாள்களாக்குகின்றனர். அரசியல்வாதிகளும்கூட இதற்க்கு விதிவிலக்கல்ல. அறிவு நாணயம் (intellectual honesty) அற்ற இதுபோன்ற நடவடிக்கைகளால் உண்மைகள் மறைக்கப்படுவதோடு பொய்கள் மக்களின் மனதில் நிலைநிறுத்தப்படுகின்றன.

என்ன செய்யலாம்?

இது எவ்வளவு பெரிய சமூகக்கேடு என்று கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். இனி விவாதங்களை கவனிக்கும்போது இவ்வாறான தவறான முறைகள் கையாளப்படுகின்றனவா என்று உற்றுநோக்குங்கள். இத்தகைய அறிவு நாணயமற்ற செயல்களைச் செய்பவர்கள் பெரும்பாலும் பொய்யர்களாவே இருப்பர். அத்தகையவர்களை அடையாளம்கண்டு அவர்களைப் பொருட்படுத்தாமல் இருப்பது நலம். எந்த ஒரு மேடை விவாதமோ, தொலைகாட்சி விவாதமோ, வலைத்தள கருத்துப்பதிவு (comment) சண்டைகளோ ஒரு அறிவுப்பூர்வமான முடிவுக்கு வர உதவாது. ஏனென்றால், அறிவு (அறிவியல்/அரசியல்/சமூகம்) என்பது பல ஆண்டுகள் கடின உழைப்பு, வாசிப்பு, கற்றல், புரிதல், ஆய்வுகள் என்று நெடிய வழிப் பயணம். ஒரு குறுகிய கால விவாதம்  அதைத் தீர்மானிக்க முடியாது. அதற்காக விவாதங்கள் வேண்டாம் என்று நான் சொல்லவரவில்லை. அவற்றை வாழ்வியல் உண்மைகளாக நம்பவேண்டாம் என்று சொல்கிறேன்.

"அறிவியலில் தேரோடும் தெருக்கள் கிடையாது. அதன் செங்குத்தான வழிகளில் களைப்போடு ஏறிச் செல்வதற்குத் தயங்காதவர்களுக்கு மட்டுமே அதன் ஒளிமயமான உச்சிகளை எட்டுகின்ற வாய்ப்பு கிடைக்கும்." -காரல் மார்க்ஸ்

Wednesday, July 5, 2017

தமிழை வளர்க்க என்ன செய்யலாம்? - 5 எளிய செயல்கள்

1. தமிழில் பேசுங்கள்/எழுதுங்கள்!

ஒரு மொழியின் உயிர்ப்பே அதை எவ்வளவு பேர் எவ்வளவு அதிகமாகப் பேசுகிறார்கள், எழுதுகிறாரகள் மற்றும் இதர இடங்களில் பயன்படுத்துகிறார்கள் என்பதைப்பொறுத்தது. நீங்கள் வீட்டிலும், பொதுவெளியிலும் தமிழிலேயே பேசுங்கள். நாளுக்கு நாள் உங்கள் பேச்சில் உள்ள பிறமொழிச் சொற்களைக் குறைக்க முயலுங்கள். "உதாரணமாக" --> "எடுத்துக்காட்டாக", "சேஞ்ச் இருக்கா?" --> "சில்லறை இருக்கா?", "மொசாம்பி ஜூஸ்" --> "சாத்துக்குடிச் சாறு". இப்படி கொஞ்சம் கொஞ்சமாகத் தமிழை பழக்கப்படுத்துங்கள். சில ஆண்டுகளுக்கு முன், கணினி, இணையம் போன்ற சொற்கள் சிலர் மட்டுமே அறிந்ததாக இருந்தன. இன்றோ பெரும்பான்மை தமிழர்களுக்கு இச்சொற்கள் பரிட்சயமானவை நன்கு தெரிந்தவை.

வங்கி சென்றால் தமிழில் படிவங்களைக் கேளுங்கள். வங்கி, அலைப்பேசி நிறுவனங்கள், விளம்பர நிறுவனங்கள் போன்றவற்றில் இருந்து வரும் தொலைப்பேசி அழைப்புகளுக்குத் தமிழிலேயே பதிலளியுங்கள். அவர்கள் வேறு மொழி பேசினால், தமிழ் தெரிந்த ஒருவரைப் பேசச் சொல்லுமாறு கூறும் உரிமை நமக்குண்டு! இப்படி அதிக எண்ணிக்கையில் தமிழில் சேவைகள் பெறப்படும்போது, அவற்றின் அவசியம் அந்நிறுவனங்களுக்கும் புரியும். தமிழ் நூல்கள், செய்தித் தாள்கள், வலைத்தளங்கள் போன்றவற்றை அதிகம் படியுங்கள். தமிழுக்குச் சந்தை மதிப்பு அதிகரித்தால், தானாகப் பல நிறுவனங்கள் தமிழில் தங்கள் நூல்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் வலைத்தளங்களை மொழிபெயர்த்து வெளியிடுவர்.

2. தமிழ்வழிக் கல்வி 

இது இன்றைய சூழலில் சற்று சிக்கலான செயலே! தமிழில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த முன்னேற்றங்கள் இன்னும் சற்று பின்தங்கி உள்ளது மறுக்கமுடியாதது. ஆகவே ஆங்கிலம் நமக்கு இந்த இடைவெளியை நிரப்ப அவசியமாகிறது. அதனால் நாம் கல்வியில் ஆங்கிலத்தை சேர்த்துக்கொள்வது தவறில்லை. தமிழ் என்று எல்லாத்துறைகளிலும் தன்னிறைவு அடைகிறதோ, அன்று ஆங்கிலத்தை நாம் அடியோடு நிறுத்திவிடலாம். எப்படி நீச்சல் கற்கச் சுரைக்குடுக்கை உதவுகிறதோ, அதுபோல! அதுவரை ஆங்கிலத்தை அளவோடு கற்போம். ஆங்கிலத்தை இப்படித் தேவைக்குக் கற்றாலும், அதை ஒரு பெருமையாக எண்ணாமல் இருப்பது அவசியம்.


குழந்தைகளுக்கு நாம் ஏன் ஆங்கிலம் கற்கிறோம் என்று சொல்லுங்கள். ஆங்கிலம், அறிவின் அடையாளமோ, நாகரீகத்தின் குறியீடோ இல்லை. மாறாக அது நாம் இழந்த அறிவியல் மற்றும் சமூக முன்னேற்றங்களை அடைய உதவும் பாலம் மட்டுமே என்று விளங்க வையுங்கள். இவ்வாறு நாம் தமிழில் மட்டும் எல்லாப் பாடங்களையும் கற்கும் நாளுக்கு அவர்களை ஆயத்தப் படுத்துங்கள். இன்னும் சில தலைமுறைகளில் அது நடக்கும். ஆங்கிலேயர் நம்மை சில காலம் ஆண்டதாலும், ஆங்கிலம் பல்வேறு துறைகளில் வளர்ச்சி பெற்ற மொழி என்பதாலும் மட்டுமே ஆங்கிலம் தேவையாகிறது. இந்தி, ப்ரெஞ்சு, ஜெர்மன், சமஸ்க்ருதம் போன்ற மொழிகள் மேற்கூறிய வகையில் நமக்கு உதவாதவைகள்.

3. சமூக வலைத்தளங்களில் தமிழ்

இன்று சமூக வலைத்தங்கள் அனைவரையும் தங்களின் வலையில் சிக்கவைத்துள்ளன. இதையே ஒரு வாய்ப்பாக நாம் மாற்றிக்கொள்ளலாம். நீங்கள் கைப்பேசி வாங்கும்போதே அதில் தமிழ் உள்ளீடு வசதி உள்ளதா என்று பார்த்து வாங்குங்கள். அல்லது செயலிகள் மூலம் உங்கள் கைப்பேசியில் தமிழ் உள்ளீடு செய்ய முடியுமா என்று பாருங்கள். கூகிள் போன்ற தேடுபொறிகளிலும், முகநூல், ட்விட்டர் போன்ற தளங்களிலும் தமிழிலேயே உள்ளீடு செய்யுங்கள். வலைப்பூக்கள், யூட்யூப் போன்ற காணொளித் தளங்கள், மற்றும் இதர வலைத்தளங்களிலும் கருத்துக்களைப் பகிரும்போது தமிழில் பகிருங்கள்.

தமிழ் உள்ளீடு வசதி உள்ளதா என்று பாருங்கள்

இதன் மூலம் தமிழின் இணைய ஊடுருவல் அதிகரித்து பன்னாட்டு நிறுவனங்களும் சந்தையைப் பிடிக்க தமிழ் மொழியில் சேவைகளை மேம்படுத்த முற்பட வாய்ப்புள்ளது. மேலும் கைய்ப்பேசி நிறுவனங்களும் தமிழ் மொழி உள்ளீடு உள்ள கருவிகளை அதிகம் தயாரிக்க இது ஒரு உந்துதலாக இருக்கும். கணினியில் தமிழ் தட்டச்சு செய்வது சற்று கடினமே. ஆனால், கைப்பேசிகள் இன்று இதை எளிதாக்கியுள்ளன. இதை நாம் முழுமையாகப் பயன்படுத்தி இணையத்தில் தமிழை அரியணை ஏற்றுவோம்!

4. மொழிபெயருங்கள்

விக்கிபீடியா, ப்ராஜெக்ட் குட்டென்பெர்க் போன்ற கட்டற்ற கலைக்களஞ்சியங்கள் மற்றும் மின்-நூலகங்களைத் தமிழில் மொழிபெயர்க்க உதவுங்கள். மேலும் கட்டற்ற மென்பொருள்கள் மற்றும் அவற்றின் உதவிக் கோப்புகளைத் தமிழில் மொழிபெயர்க்க உதவுங்கள். இதன் மூலம் தமிழ் மட்டுமே தெரிந்தவர்களும் கணினி மற்றும் இணையம் போன்ற புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த நீங்கள் உதவலாம்.


கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறைக் காலச் செயல்பாடாக இதுபோன்ற மொழிபெயப்புப் பணிகளை கல்லூரிகள் வழங்கலாம். மருத்துவ மாணவர்கள் ஒவ்வொருவரும் ஆண்டு விடுமுறையில் விக்கிப்பீடியாவில் உள்ள மருத்துவம் சார்ந்த கட்டுரைகளில் ஒன்றையோ இரண்டையோ மொழிபெயர்த்தால் சில ஆண்டுகளில், எந்த அளவுக்கு நாம் மருத்துவ அறிவைத் தமிழுக்கு இறக்குமதி செய்திருப்போம் என்று எண்ணிப்பாருங்கள். இப்படியே  வரலாறு, தொல்லியல், உயிரியல், வேதியல், கணிதம், பொறியியல் என்று பலவேறு துறை மாணவர்களும் ஆளுக்கு ஒன்றாகத் தங்கள் தங்கள் துறை சார்ந்த கட்டுரைகளை மொழிபெயர்த்தால் அதன் தாக்கம் என்னவாக இருக்கும்? சிந்தியுங்கள்!

5. புதிய கலைச்சொற்களை கற்றல்/உருவாக்குதல் 

எல்லாவற்றிற்கும் காரணப்பெயர்களா?
(நகைப்புக்காக மாற்றப்பட்ட படம்!)
இது இன்றியமையாத ஒன்று. ஒரு உயிருள்ள மொழி, வளர்ந்துகொண்டே இருக்கும். அகவே, தமிழ் மொழி வளர்வதற்கு அதற்க்குப் புதிய சொற்கள் தேவை. கடந்த 100 ஆண்டுகளில் ஏற்பட்ட அறிவியல் வளர்ச்சிகள் ஏராளம். அவற்றைக் குறிக்கத் தமிழில் சொற்கள் உருவாக வேண்டும். எல்லாவற்றையும் காரணப்பெயர்களாக மட்டும் வைப்பது சற்றே கடினமான ஒன்று. மிக நீண்ட மற்றும் நகைப்புக்குரிய வகையில் காரணப்பெயர்களை வைப்பதைவிட, சற்று சிறிய, மனதில் நிற்கக்கூடிய எளிய சொற்களை உருவாக்குவதும் இன்றைய தேவை! இச்சொற்களை உருவாக்குவது மொழியியல் வல்லுனர்களின் வேலை! இவ்வாறு உருவான சொற்களை பயன்பாட்டிற்குக் கொண்டுவருவது, அனைவரது கடமை! ஆகவே உங்கள் ஆர்வத்திற்கேற்ப இவ்வகையிலும் நீங்கள் உதவலாம்!

Tuesday, July 4, 2017

Java 9 is Coming With Modularity

Few weeks back, due to controversies surrounding modularity, RedHat and IBM voted against the next release of Java (9). But now everything seems to be back on track! Java Specification Request (JSR) 376 has been voted with a overwhelming majority of 24-0. RedHat abstained form voting, but expressed its support for the schedules of future versions of Java.

Major players like the Eclipse Foundation, Twitter and Hazelcast have took a 180 degree turn and voted in support of modularity as they are happy with the progress. Modularity was actually planned for Java 8. But due to the complexity of the project and inability to reach a unanimous opinion on the implementation, it has been postponed to version 9.

Project Jigsaw was started in a view to bring modularity to Java. Though it won't support all OSGi functionalities, this project can go hand in hand with OSGi for better scalability, availability and performance. Already Java is getting enough mistreatment in Oracle's hands. Let us hope this new change gives the platform a good thrust forward.

Monday, July 3, 2017

Top Five Free (as in Freedom) Music Sites

Recently a silly old man from Tamil Nadu was crying foul that he is not getting royalties for his music. Whenever they play his songs on TV or radio or perform it on stage, he expects a share of profit or at least he wants them to seek his permission. While the tyrannical copyright laws facilitate such inhuman extortion, where is the Free Software equivalent of Music? Software industry itself has its origin after the advent of copyright laws. But music is older than Homo sapiens species itself! Greatest works of music known to us were already centuries old when the crude copyrights laws were made. Except few hegemonic and anti-human societies, where advances in science and creativeness in arts were reserved to few group of people (and far worse in cases where it is locked down to people born in to particular family/community), world, at large, always shared knowledge and publicized creativity to the masses. So in this post-human world, are there real humans still left to share their knowledge and creativity to others? May be! They may be very few. But such people are for real. Here are some great sites which allow you access as well as to share music with lesser restrictive licenses.

1. opsound.org

Opsound is a site by Sal Randolph. inspired by free software and applies its philosophy to music. Musicians and sound artists can add their work to the Opsound repository using any of the copyleft licenses developed by Creative Commons. Everyone can download, share, remix, and reimagine music available in their site.

2. freemusicarchive.org

This site hosts lot of MP3 files and they also have apps for iOS and Android devices to access their content. Instead of modeling themselves purely after a later idea like Free Software, they also draw inspiration from Radio! They want to continue what radio did in previous generations, i.e. provide people with free music. Artists can upload their music in whole or part (and hence can attract more customers) and people can enjoy the music without any registration.

3. openmusicarchive.org

Artists Ben White & Eileen Simpson have started this project so that music works whose copyright term has expired and in public domain can be made available to a wider audience through internet. Music with no economic value which are usually forgotten by mainstream record companies are given a second life after their copyright term. Also the site encourages more people to collaborate and make their music publicly accessible.

4. cpdl.org

Is there a Wikipeida of music? Yes, it is cpdl.org. They have a large number of sheet music and music files (MIDI and other formats) in their archive. They host only "free" music without any restrictions even under the funny Mickey Mouse Law of USA. Since its inception in 2005, it has grown to a colossal collection of more than 25,000 scores by more than 2,800 composers.

5. musopen.org

A non-profit organization that aims to provide free sheet music, lessons and books for teaching music. Not only serving as a platform to share music, musopen.org aims to make music education reachable to more people.

What will happen if humans have no civilization or government? Do you think we will be killing each other for food and other needs? Do you think that survival of the fittest means "do whatever to survive"? The answer is "NO!". All communities of humans, be it from so called civilized cities to hunter-gatherers of dense forest, evolved to live a social and community life. Even our non-human ancestors lived in groups and not as "individuals with a will to survive at any cost". Our evolution has shaped us to be co-operative, collaborative and altruistic to some extant. The cut-throat competition and "survival-of-the-fittest" mantra we hear again and again are just modern and unnatural inventions which are making our way of life less and less sustainable. We shared everything before from land to food. Then slowly everything was taken out of the common ownership. The last thing remained in collective ownership was knowledge and creativity as they are inexhaustible resources. But human greed knows no limit and it has even snatched these inexhaustible resources from collective ownership. So to reverse the whole set of damage we have brought on our species and on the planet, we have to start from reversing the latest mistake. By liberating knowledge and setting it free, we can start the process of setting the entire humanity free!