Thursday, June 9, 2016

கொஞ்சம் படிங்க பாஸ்! - பகுதி 1

நூலின் தலைப்பு: Animal Farm (பண்ணை)
ஆசிரியர்: ஜார்ஜ் ஆர்வெல் (George Orwell)
பக்கங்கள்: 104 
வெளியீடு: பென்குயின் இந்தியா
மொழி: ஆங்கிலம்
விலை: < ரூ. 100/-
வயது: 10+
பொருள்: சிறுவர் கதை, அரசியல், சமூகம்
ஜார்ஜ் ஆர்வெல், பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த 20ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த எழுத்தாளர்களில் ஒருவர். அவர் ரஷ்யாவில் நிகழ்ந்த கம்யூனிச புரட்சியை அடிப்படையாக வைத்து ஒரு சிறுவர்களுக்கான கற்பனைக் கதையாக இந்த நூலை எழுதியுள்ளார். எளிய ஆங்கிலத்தில் இருந்தாலும் ஒரு நல்ல ஆங்கில அகராதியைத் துணைக்கு வைத்துக்கொள்வது நல்லது.

கதைச் சுருக்கம்:

விலங்குகள் மனிதர்களின் அடக்குமுறைக்கு எதிராக புரட்சி செய்து ஒரு பண்ணையைக் கைப்பற்றுகின்றன. ஆரம்பத்தில் ஆர்வத்துடன் ஒன்றுபட்டு உழைத்து முன்னேற்றம் காண்கின்றன. பின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் பன்றி இனம் மெதுவாக அடக்குமுறையைக் கையாள்கிறது. நாளடைவில், புரட்சியின் பொருள் மறந்து, பன்றிகளுக்கும் மனிதர்களுக்கும் வேறுபாடில்லாத நிலை ஏற்படுகிறது!

கருத்து:


தனியாக வாசித்தால் இது ஒரு நல்ல சிறுவர்களுக்கான கற்பனைக் கதை. அனால், ரஷ்யப் புரட்சியை மனதில்கொண்டு வாசித்தால், எப்படி அரசியல் அதிகாரம் சீரழிவிற்கு வழிவகுக்கிறது என்று சொல்லும் ஒரு சிறந்த அரசியல்/சமூக நூலாகவும் இது உள்ளது. இளைய தலைமுறையினர் அரசியல் அறிவு பெறவும், அவர்களின் சமூக சிந்தனையைத் தூண்டவும் இந்நூல் உதவும்.

English Summary:

Book Title: Animal Farm
Author: George Orwell
Pages: 104
Publisher: Penguin India
Language: English
Price: < Rs. 100/-
Age Group: 10+
Category: Children's Novel, Politics, Society

No comments: